ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

65 0

ராகம படுவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரிவு குற்ற விசாரணை பிரிவினரால் ராகம படுவத்தை பகுதியில் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 9 கிலோகிராம் 220 கிராம் ஹெராயின், 67 கிலோகிராம் 520 கிராம் கேரள கஞ்சா, 02 துணை இயந்திர துப்பாக்கிகள், 10 9 மிமீ உயிருள்ள வெடிமருந்துகள், ஒரு வாள், விமானப்படை சீருடைகள், 4 மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினி மற்றும் 4 தராசுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் அப்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.