கம்பஹா – கெஹெல்பத்தர பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் பெண் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கெஹெல்பத்தர பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 1073 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

