முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

40 0

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (04 ) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு  25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த  போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.