அக்போபுரத்தில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

64 0

திருகோணமலையில் அக்போபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று புதன்கிழமை (02) அக்போபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்போபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அக்போபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.