‘உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்’ எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026 – 2030 அரச நிதிச் சட்டகம் மற்றும் அரச நிதி மூலோபாயக் கூற்று மற்றும் தேசிய கொள்கைச் சட்டகமான ‘செழிப்பான நாடு – அழகான வாழ்வு’ எனும் கொள்கைச் சட்டகத்திற்கமைய 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு (வரவு – செலவுத் திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு – செலவுத் திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

