Landau நகர முதல்வருக்கான மனுக்கையளிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்திப் பயணம் – 4 வது நாள்

519 0

யேர்மனியில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று 4 வது நாளாக காலை 10 மணிக்கு Landau நகரசபைக்கு முன்பாக தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி பதாதைகளை அமைத்து வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அத்தோடு Landau நகர முதல்வர் திரு Thomas Hirsch அவர்களையும் சந்தித்து மனுவும் கையளிக்கப்பட்டது. Landau நகர முதல்வர் திரு Thomas Hirsch அவர்கள் மனிதவுரிமைகளுக்காக நடைபெறும் இப்பயணம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று மாலை 4 மணிக்கு Frankfurt நகரத்தை வந்தடைந்து அங்கும் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ் மக்களுடனான சந்திப்பிலும் ஈடுபடவுள்ளனர்.