அநுராதபுரம் துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த இளைஞனின் நண்பர்கள் கைது!

80 0

அநுராதபுரம் – திரப்பனை, கல்குலம் பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த  28 வயதுடைய இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் அநுராதபுரம் சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 29 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் ஐவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனின் நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.