அநுராகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

76 0

கம்பஹாவில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிந்திவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அநுராகொட பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 1440 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.