ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

73 0

களுத்துறையில் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோனபொல பகுதியில்  வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 07 690 மில்லி கிராம் ஹெரோயின் , 90 போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள்  மற்றும் கையடக்கத் தொலைபேசி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகஹஹேன  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.