வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு டிசம்பருக்குள் தென்னை கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை

77 0

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாக டிசம்பருக்குள் 650000 இலட்சம் தென்னை கன்றுகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில்  திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

2030ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 4200 மில்லியன் தேங்காயை உற்பத்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட டிசம்பர் மாதத்திற்குள் 650000 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் 72000 தென்னங்கன்றுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு நடுகைத்திட்டம் மூலம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்றார்.