களனியில் கழிவுத் தேயிலை கைப்பற்றல்; லொறியுடன் சந்தேக நபர் கைது!

67 0

களனி பொலிஸ் பிரிவின் களனி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3,681 கிலோ மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கழிவுத் தேயிலை மற்றும் ஒரு லொறியுடன் சந்தேக நபர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பானது நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.