அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஈரான் அமெரிக்காவின் தாக்குதலிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் தாக்குதலை மேற்கொண்டேயாகவேண்டிய நிலையில் உள்ளதுஆனால் அதன் தாக்குதல் எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பது தெரியவில்லை.
பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து அல்லது அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்.
அவர்கள் அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்றால் இது மிக விரைவாக மிகவும் குழப்பமாகிவிடும்.
ஈரான் குறிப்பிட்ட அளவிலான தாக்குதலை மேற்கொண்டால் பதிலடி கொடுத்துவிட்டதாக அவர்கள் திருப்தியடையலாம்
டிரம்ப் அதைத் தொடர விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன் மேலும்போதும் நீங்கள் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டீர்கள். நான் இப்போது இதைச் செய்துவிட்டேன். இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது’.என டிரம்ப் இஸ்ரேலியர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கின்றேன்
ஈரானுடனான மோதலில் இஸ்ரேலிய மக்கள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக “மிகவும் ஒற்றுமையாக” உள்ளனர் ஆனால் யாரும் நீடித்த போரை விரும்பவில்லை.
“அமெரிக்கர்கள் வெற்றி பெற்று இப்போது எல்லாம் முடிந்துவிட்டால் இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள் அது ஒரு வேலை முடிந்தது என்ற உண்மையான உணர்வு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் அது மிகப்பெரியது

