அங்கொடையில் ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

64 0

கொழும்பில் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கொடை பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று வெள்ளிக்கிழமை (20) முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அங்கொடை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 204 கிராம் ஹெரோயின் மற்றும் 63 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த 800,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.