அரலகங்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ருஹுனுகம பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 44 வயதுடையவர்கள் ஆவார்.சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

