கீதாவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி

288 0

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து கடந்த 03 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, இம்மாதம் 15 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.