புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு

116 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்று அதன் தவிசாளராக முன்னாள் போராளி “வேலாயுதம் கரிகாலன்” அவர்களும், பிரதி தவிசாளராக ஓய்வு நிலை பிரதி கல்விப்பணிப்பாளர் “சுந்தரம் பரந்தாமன்” அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், தெரிவு செய்யப்பட்ட  உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் தங்களது கடமைகளை பொறுப்பேற்றனர்.