உரிய தரம் மற்றும் நிர்வகிப்பு இல்லாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டு பொருட்கள் காரணமாக சிறுவர்கள் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
விஷ தன்மையுடனான பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை பயன்படுத்துவதனால் சிறுவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் தோற்றியுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.