கொடுத்த குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்

64 0

டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்கு கடவுச்சீட்டுகளை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (27) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்டப்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர், “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்கு 3 கடவுச்சீட்டுகளை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டின் பேரில்  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.