பிள்ளைகளை தொலைத்து விட்டு தற்போது கையேந்தும் நிலை

432 0

மது பிள்ளைகளை தொலைத்து விட்டு கையேந்தும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் தான் எமக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இராணுவத்தினரின் கையில் எங்கள் பிள்ளைகளை ஒப்படைதோம். எனினும் நாங்கள் ஒப்படைத்தவர்கள் எங்கே? இதற்கு நல்லாட்சி அரசாங்கம் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரண்டு மாதங்களை கடந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.