கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்!

298 0

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம் ஏற்கெனவே கடந்த 2016 ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து அப்பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் பின்னர் புதிய வேந்தர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வேந்தர் நியமிக்கப்படும் வரையும் பட்டமளிப்பு நிகழ்வும் பிற்போடப்பட்டு வந்தது.

எனினும் புதிய வேந்தர் தற்பொழுது நியமிக்கப்பட்டிருப்பதால் 21வது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தரின் பிரசன்னத்துடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.