விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை – நாமல் கருணாரத்தன

252 0
வறட்சி காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை.
இதனால் அவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை விவசாய சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட  அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், நாமல் கருணாரத்தன இதனை தெரிவித்ததுடன், இதுதொடர்பில் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.