வடக்கு மாகாண சபையின் 92 வது அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அமர்வில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் சபை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்காமையினால் முதலமைச்சர் வீடு திரும்பினார்.
முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதல்வர் தலையிட்டு வேலையில்லா பட்டதாரிகளுக்கு தீர்வினை பெற்று கொடுத்துள்ளார் ஏன் தங்களால் அதனை செயற்படுத்த முடியவில்லை என தெரிவித்த தோடு தமக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளே செல்ல முடியாது என கோரிக்கை விட்டனர் இதன்போது முதல்வர் நான் வீடு செல்கிறேன் என கூறிவிட்டு வாகனத்தில் ஏறி சென்று விட்டார்.