கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது!

164 0

கிளிநொச்சி  பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.