முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி

285 0

மன்னார் முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முசலி பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பிரதேசத்தை அண்மித்துள்ள மளங்காடு கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

நேற்று முன்தினம் (6) மாலை 5.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் 64 வயதான ஒருவரையே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு உயிரிழந்தவரின் சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது