பிரான்சு நுவாசியல் (Noisiel) நகரில் தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!

47 0

முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு நுவாசியல் (Noisiel) நகரில் நேற்று (08.05.2025( வியாழக்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசியல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.நினைவுரைகளும் இடம்பெற்றன.. குறித்த நிகழ்வுகள் பிரான்சில் பாரிஸ் நகரிலும் ஏனைய புற நகர் பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு -ஊடகப்பிரிவு)