யார் இந்த புதிய பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர்?

14 0

அமெரிக்காவிலிருந்து தெரிவான முதல் திருத்தந்தை இவர் ஆவார்.

ரொபர்ட் பிரான்சிஸ் பிரெவஸ்ட் அவரது இயற் பெயராகும்.

1955  புரட்டாதி மாதம் 14ஆம் திகதி சிகாகோவில் பிறந்தார்.

இவரது தந்தையின் பெயர் லூயி மாரியஸ் பிரெவஸ்ட், தாயாரின்  பெயர் மில்ட்ரெட் மார்டினெஸ் ஆகும்.

இவர் தனது சிறுவயதில் சிக்காகோவிலுள்ள விண்ணேற்ப்பு அன்னை ஆலயத்தில் பீடப்பணியாளராக பணியாற்றினார்.

1973இல் தூய ஆகுஸ்தினார் துறவர சபையின் சிறிய குருமடத்தில் தன்னுடைய உயர்நிலை கல்வியை முடித்தார்.

1977இல் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டபடிப்பை (B.Sc.) பெற்றார்.

இவர் ஜூன் மாதம் 19ஆம் தேதி 1982 ஆம் ஆண்டு அருட்பணியாளராக திருநிலை படுத்தப்பட்டார்.

தூய ஆகுஸ்டினிய சபையில் துறவியாக இணைந்து, அவரது ஆரம்ப கால பணியை பெரு நாட்டில் ஆற்றினார்.

1985–1986 மற்றும் 1988–1998 காலப்பாகுதிகளில் பெரு நாட்டில் பங்கு தந்தையாகவும் , மறைமாவட்ட அதிகாரியாகவும் , குருமட ஆசிரியராகவும்,நிர்வாகியாகவும் பணியாற்றினார் .

2001 முதல் 2013 வரை ஆகஸ்டின் துறவர சபை தலைவராகவும் பணியாற்றினார் ‎

இவர் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார்.

2015 முதல் 2023 வரை பெரு நாட்டின் சிக்லாயோ மறைமாவட்டத்தில் ஆயராகவும்,

இவர் 2023இல் மறைந்த முன்னால் திருதந்தை பிரான்சினால் கர்த்தினாலாக  நியமிக்கப்பட்டார்.

இவர் ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியம், பிரெஞ்சு மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளில் பேசக்கூடியவரும், லத்தீன் மற்றும் ஜேர்மன் மொழிகளை வாசிக்கக்கூடியவருமாவார்.