கம்பஹா – ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனே வீதி பிரதேசத்தில் மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ராகமை, கனே வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு வீட்டிலிருந்து வெளியெ சென்றுள்ள நிலையில் மறுநாள் அதிகாலை வீட்டிற்கு முன்பாக இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்திலிருந்து பொல் மற்றும் இரும்பு கம்பி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ராகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

