உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : முற்பகல் 10 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

73 0

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில்  வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை 10 மணி வரை நிலைவரப்படி,

கம்பஹா மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

களுத்துறை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

நுவரெலியா மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்

யாழ் மாவட்டத்தில் 18 சத வீத வாக்குப் பதிவுகளும்

மன்னார் மாட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்

பதுளை மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

மாத்தறை மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

கொழும்பு மாவட்டத்தில் 18 சத வீத வாக்குப் பதிவுகளும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்

புத்தளம் மாவட்டத்தில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும்

காலி மாவட்டத்தில் 19 சத வீத வாக்குப் பதிவுகளும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 22 வீத வாக்குப் பதிவுகளும்

கேகாலை மாவட்டத்தில் 20 வீத வாக்குப் பதிவுகளும்

மாத்தளை மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவுகளும்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 வீத வாக்குப் பதிவுகளும்

கண்டி மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

மொனராகலை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

குருணாகல் மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

திருகோணமலை மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும் 

வவுனியா மாவட்டத்தில் 35 சத வீத வாக்குப் பதிவுகளும்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.