அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

85 0

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலியபுரம் பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04 இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் சாலியபுரம்  பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 200 போதை மாத்திரைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து சம்பாதித்த 69 ஆயிரம் ரூபா  பணம் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்டப்டுள்ளன.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.