இந்தியாவில் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் தீ விபத்து : 4 பேர் பலி

105 0

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (2) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயையடுத்து அங்கிருந்த 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (02)  இரவு 8 மணியளவில் மின்சார சேமிப்பு அறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மேலதிக  விசாரணைகளை கோழிக்கோடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.