மின்னேரியாவில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து : இருவர் பலி!

101 0
மின்னேரியாவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்து 40 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹபரனை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை  (01) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பயணிகள் பஸ்களே இவ்வாறு விபத்துக்குளாகியுள்ளன.

குறித்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்  குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.