பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் நல்லடக்க ஆராதனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

133 0
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் ரோம் நேரப்படி சனிக்கிழமை (26) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியே இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்.