பதுளை , மஹியங்கனை, திஸ்ஸபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

