டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

122 0
மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆரம்பத்தில் டொன் பிரியசாத்தின் மரணத்தை உறுதிப்படுத்திய போதிலும், பிரியசாத் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.