கிராண்ட்பாஸில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

88 0
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொட்டலங்க  பிரதேசத்தில்  சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  தொட்டலங்க பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவர்  ஆவர்.

சந்தேக நபரிடமிருந்து 180 லீற்றர்  சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.