59 வது நாளான இன்றும்கவனிப்பாரின்றி தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

313 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல மக்களின் உயிர்தியாகங்களை நினைவு கூராது விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவது வேதனை அளிப்பதாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும்,மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன்59 அவது நாளாக தொடர்கின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள்மாதர்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.