உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் செந்தில் தொண்டமான்

77 0

பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் டெலிபோன் சின்னங்களில் போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்தார்.

எல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட நமுனுகல, பிங்கராவ, இந்தகல ஆகிய தோட்டங்களிலும், அப்புத்தளை பிரதேச சபைக்கு உட்பட்ட அப்புத்தளை, பிளக்வூட், புதுக்காடு ஆகிய தோட்டங்களிலும், பண்டாரவளை பிரதேச சபைக்கு உட்பட்ட நாயபெத்த தோட்டத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.