14 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

81 0

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  • வீட்டை வெளியேற வேண்டாம். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்
  • இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலை தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.