வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில்…… (காணொளி)

262 0

 

வவுனியாவில் சழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்றுடன் 70 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சுழற்சி முறையில் உண்ணாவிரப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் பேராட்டத்தின் 70 ஆவது நாளின் நிறைவை முன்னிட்டு, வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.