ஊடகவியலாளர் நிலாந்தன் தமிழரசுக் கட்சியில் போட்டி!

99 0
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் இம்முறை சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் போட்டியிடுகின்றார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் தமிழரசுக் கட்சியின் செங்கலடி ஆறாம் வட்டார வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அவர் இன்று வியாழக்கிழமை (20)  கையொப்பம் இட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி இம்முறை ஒன்பது ஊராட்சி சபைகளை கைப்பற்றி அமோக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் ஊடகவியலாளராகவும், சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஊடகவியலாளர் நிலாந்தனின் அரசியல் பிரவேசம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.