கோட்டாபயவின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

57 0

2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு, சட்டத்தை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக, அவருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.