கொழும்பு கோட்டையிலிருந்து தனியார் பஸ் வண்டியொன்றில் அநுராதபுரம் சென்ற ரஷ்ய சுற்றுலா பயணி தனது பயணப் பை காணாமல் போயுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (14) அநுராதபுரம் சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட சுற்றுலா பொலிஸார் வவுனியாவுக்கு செல்லும் பஸ் வண்டியில் பயணப் பை ஒன்று இருப்பதாக தகவல் அறிந்தனர்.
பின்னர் பொலிஸார் பயணப் பையை மீட்டு சுற்றுலாப் பயணியிடம் கையளித்துள்ளனர்.

