காங்கேயன்னோடை பகுதியில் 3492 போதை மாத்திரையுடன் ஒருவர் கைது

67 0

காத்தான்குடி, காங்கேயன்னோடை பகுதியில்  3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் சட்டவிரோதமாக வைத்திருந்த 3,492 போதை மாத்திரைகளை கைப்பற்றியதுடன் 36 வயதுடைய ஒருவரை கைது செய்ததுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்து வருதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.