சவுதியால் நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை 2ஆயிரம் பள்ளிவாசல்களக்கு பகிர்ந்தளிக்க முடிந்தது

83 0

சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்க முடிந்ததாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம்  அமைச்சர் தலைமையில் கூடியபோது. சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட  பேரீச்சம் பழங்களi பகிர்ந்தளிக்க எடுத்த நடவடிக்கை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்க முடிந்தது. இதற்கு முன்னர் பேரீச்சம் பழங்களைப் பகிர்ந்தளிக்கும் போது மோசடிகள் இடம்பெற்றதாகத் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. வரலாற்றில் முதல் தடவையாக நியாயமான, வெளிப்படையானமுறையில் இந்தப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

இதேவேளை, இந்நாட்டில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களைப் பதிவுசெய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த வருடத்தில் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் இலங்கையிலிருந்து செல்வதற்கான கோட்டா கிடைத்திருக்கிறது, ஒருவருக்கான செலவு 21இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் 3 இலட்சம் ரூபா இலாபம் ஈட்டுவது நியாயமற்றது.

யாத்திரிகர்களுக்கு மேலும் சலுகை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார்.