அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

83 0

சுகாதார அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ  அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (12)  விஜயம் செய்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின்  பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து   நபரொருவர் பெண் வைத்தியர் ஒருவரை பாலியஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம்  திங்கட்கிழமை (10)  இரவு இடம்பெற்றுள்ளது.

பெண் வைத்தியர் பாலியஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ  அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  விஜயம் செய்துள்ளார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் துணை பணிப்பாளர் உள்ளிட்ட  வைத்தியக்குழுவிடம் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.