மாத்தறை, கிரிந்த, அதகலவெல்ல பகுதியில் காட்டு யானை தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹாராமை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மீன்பிடி தொழிலுக்காக மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து கிரிந்த துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது வீதியில் இருந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலமானது பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.