மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக மூவர் நியமனம்

85 0
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு.பிரேமசந்திர, கே.பிரியந்த பெர்னாண்டோ, ஏ.பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.