மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்த அரசாங்கம் புதிய திட்டம்!

220 0

மறுசீரமைப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம், மீண்டும் ஏற்படாது இருக்கும் வகையில், நாட்டு மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்தும் வகையில், சகல இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரது கருத்துக்களையும் பெற்று தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பில் அரச கொள்கையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ‘மறுசீரமைப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையினை’ செயற்படுத்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.