நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்

309 0

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்ய போகின்­றனர்? அவர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட வியா­பார பண்ட அற­வீட்டு சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. விசேட வியா­பார பண்ட அற­வீடு மூலம் பேரீச்­ச­ம்ப­ழத்­திற்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­காயம், உருளைக் கிழங்கு இறக்­கு­மதி உணவு வகையில் அதி­க­ரிப்­பதன் ஊடாக பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலாபம் பெறு­வார்கள் என
கூற­மு­டியும். எனினும் பேரீச்­ச­ம்பழ வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயி­ரி­டப்­ப­டு­கின்­றதா? பேரீச்­ச­ம்பழ பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலங்­கையில் உள்­ள­னரா? இல்லை; நோன்­பா­ளிகளை வைத்து அர­சாங்கம் தனக்கு இலாபம் ஈட்­டவே முயற்­சிக்­கி­றது. இது பெரும் அநி­யா­ய­மாகும்.

எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப்போகின்­றனர்? பெரி­தாக தம்மை முஸ்லிம் தலை­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வர்கள் என்ன பதில் வழங்க போகின்­றனர் என கேள்வி எழுப்பினார்.