சம்மாந்துறையில் 05 உணவக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

104 0

சம்மாந்துறையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (25) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து  வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் சோதனையில்  இனங்காணப்பட்ட  5  உணவக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான விடயங்களை  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.